Ambarish Sridharanarayanan

Personal website + blog of Ambarish Sridharanarayanan.

அத்துச்சாரியய் பெயரிற்கு முன்னும் வரும்

ambarishdravidian languages

பெரும்பாலும் மகரத்தில் முடியும் சொற்களுக்கு அத்துச்சாரியய் வரும். மரத்தய் நோக்கினேன். பழத்தினது சுவய். ஆயிரத்தில் ஒருவன். மகரத்தில் முடியும்.

எத்தறுவாயில் இறுதி டகரம் றகரம் இரட்டிக்குமோ அத்தறுவாயில் மகரத்தில் முடிவனவிற்கு அத்துச்சாரியய் வரும். எப்படி மாடு வண்டி, ஆறு மீன், குருடு கண் முறயே மாட்டு வண்டி, ஆற்று மீன், குருட்டுக் கண் எனப் புணர்ந்தனவோ, அதுபோல் மரம் மேல், மாம்பழம் வண்டு, ஆயிரம் நூறு ஆகியவய் முறயே மரத்து மேல், மாம்பழத்து வண்டு, ஆயிரத்து நூறு எனப் புணரும்.

குறிப்பாக, இவ்விதிமுறய் பெயர்களுக்கும் பொருந்தும். இராமநாதபுரத்தய்ச் சேர்ந்தவர் “இராமநாதபுரத்துச் சீனிவாச அய்யங்கார்”. மகாராசபுரத்தில் பிறந்தவர் “மகாராசபுரத்து விசுவநாத அய்யர்”. கும்பகோணத்தில் வாழ்ந்தவர் “கும்பகோணத்து இராசமாணிக்கம் பிள்ளய்”. மாம்பலத்தில் வசிக்கும் தாத்தா “மாம்பலத்துத் தாத்தா”. பல்லாவரத்தில் வாழும் மாமன் “பல்லாவரத்து மாமன்”.

இக்காலத்தில் இந்த வழி மீறி சொல்வோர் பலர் உண்டு. ஆனால் மலயாளத்திலும் கன்னடத்திலும் இம்முறய் கெடாது இருக்கின்றது. “குறியேடத்துத் தாத்திரி” என்பவர் கேரளத்தில் சுமார் நூறாண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் குற்றவிசாரணயில் இடம்பெற்றவர். இந்நாளும் “குறியேடத்து நாராயணன்” என பெயர்கள் உள்ளன. பிரபல முன்னாள் திரய்ப்பட இசயமய்ப்பாளரின் முழுப் பெயரானது “மனயங்கத்து விசுவநாதன்”. கன்னடம் பேசும் தோழன் ஒருவனின் குடும்பப்பெயரின் தமிழாக்கம் “மடத்து”. அதாவது அவனது குடும்பம் மடத்தய்ச் சேர்ந்த குடும்பமாகும். தமிழிலும் இவ்வழியினய்க் காத்தல் வேண்டும்.